Posts

சாய் அருளால் அபிராமி அந்தாதி விளக்கம்!

 தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே பொருள் விளக்கம் தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே → கொன்றை மலரும், சண்பக மலரும் சூடி பார்வதியை தன் பாதியாக கொண்டிருக்கும் சிவசக்தியின் மகனான கணபதியே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே → ஏழு உலகத்தையும் உருவாக்கிய பெருமை உடைய அபிராமியின் அந்தாதி (தலை முதல் பாதம் வரை - முதலும் முடிவும்). → அபிராமி அந்தாதி அதாவது அன்னையின் தலை முதல் பாதம் வரை - உலகத்தின் முதலும் முடிவுமான அன்னை,  எப்பொழுதும் என் சிந்தையில் இருக்கும் அன்னை அபிராமியைப் பற்றிப் பாட கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே →  கருமை நிற உடல் உடைய கணபதியை வணங்குகிறார் அபிராமி பட்டர். சிறப்பு குறிப்பு இந்த அபிராமி அந்தாதி பாடல் முதல் பாடல் முடிவு பெற்ற வார்த்தையிலிருந்து இரண்டாவது பாடல் தொடங்குகின்றது. முதலும் முடிவும் அபிராமி என்பதனை உணர்த்தும் அ...

*அற்புதமான இறைய அனுபவப் பதிவு* கந்தர் அலங்காரப் பாடல்!

அற்புதமான இறைய அனுபவப் பதிவு சிவாய நம, இன்றைய தினம் 2 மணி நேரத்திற்கு முன்பு வாக்கிங் செல்லும் பொழுது ஒரு இடத்தில் நிறைய கற்கள் இருக்கும். அதனை லிங்கமாக உருவகப்படுத்தி ஒவ்வொரு முறை வாக்கிங் செல்லும் பொழுதும் மானசீகமாக வணங்குவதுண்டு. இன்று அவ்வாறு செய்கையில் கண்டபடி அலையும் மனதை அழிக்க மாட்டாயா இறைவா? என்ற எண்ணம் தோன்றியது. அதே நேரத்தில் மனத்தை அழிக்க முடியுமா? மனம் அழிந்தால் வாழ முடியுமா? என்ன பைத்தியக்காரத்தனமான பிரார்த்தனை என்று தோன்றியது. அதற்குப்பின் முடிந்த மட்டும் இறை நாமத்தைச் சொல்லி நடை பயணத்தை முடித்து வீட்டிற்கு வந்த பொழுது youtube நோட்டிபிகேஷன் ஒன்று வந்திருக்க அதை ஓபன் செய்த பொழுது, அந்த வீடியோவிற்கு கீழே இருந்த டைட்டில், "ஆன்மாவை அலங்கரிக்க அருணகிரிநாதர் அருளிய" என்று பார்த்த பொழுது உள் மனதில் ஏதோ ஒன்று அந்த வீடியோவை பார்க்க தூண்டியது. கந்தர் அலங்காரத்தில் சொல்லப்பட்ட ஒரு பாடலின் விளக்கம் அது: அந்த பாடல் வரிகள்: சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன...

இறைவன் அருள் இருந்தால் இந்தப் பதிவை படித்து உள்வாங்க முடியும்! இறையருளால் உண்மைப் பொருள்!

Image
  குறள்  36: அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை சொற்கள் பிரித்து விளக்கம்: அன்றறிவாம்   - சில செயல்களின் பயனை உடனடியாக அறிந்து கொள்ள முடியாது நாம் செய்யும் தர்மச் செயல்களுக்கு உடனடியாக அதன் முழு பயனை அறிய முடியாது. என்   - எது அல்லது எதையெனப் பொருள்படும் இடைச்சொல் எதை செய்கிறோமோ அதை   என்பதாகப் பொருள்படும். ஆது   - இரக்கத்துடன், பரிவுடன் இதன் பொருள், தர்மத்தை இரக்கமும் பரிவும் கொண்ட மனப்பான்மையுடன் செய்ய வேண்டும் என்பதாகும். அறம்   - தர்மம் அறம் என்பது பிரதிபலன் பாராது செய்யும் தர்மம். செய்க   - செய்தல் அறத்தின் ( பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் இல்லாமல், பார்க்க குறள் 35)  அடிப்படையில் செயல்களைச் செய்தல். மற்றது   - இவ்வாறு யோசிக்காமல் செய்யப்பட்ட தர்மங்கள் (மற்றவை அல்ல) எண்ணிப் பின்பு பயன் பார்த்து செய்யும் தர்மம் அல்லாமல், உண்மையான அர்த்தமுள்ள தர்மச் செயலைக் குறிக்கிறது. பொன்றுங்கால்   - உடலை விட்டு ஆன்மா நீங்கும் பொழுது இறப்பின் தருணத்தில், இந்த உடலை விட்டுப் பிரியும் தருணத்தில். பொன்றாத் துணை ...