திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் போற்றிகள் - இறைவன் அருளுடன் தமிழ் அகராதிப்படி உண்மைப் பொருள்!
ஒளியாகி அண்டமெல்லாம் நிறைந்திருப்பவன் திருவடி வணங்குவோம்! எங்கும் நிறைந்திருப்பவன் சிவாய நம இறைவனின் பெருமையை உணர்ந்து அவரைப் போற்றித் துதிக்கும் பொழுது நம் அகத்தில் இருக்கும் இறைவன் உளம் மகிழ்கிறான். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைப் போற்றி இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ஒளியாகி எங்கும் நிறைந்திருப்பவனைப் போற்றுவோம். ஆதி பகவன் தாள் போற்றி - முதன்மையானவன் திருவடிகள் போற்றி வாலறிவன் நற்றாள் போற்றி - பரிசுத்தமானவன் திருவடிகள் போற்றி மலர்மிசை ஏகினான் மாணடி போற்றி - எங்கும் நிறைந்திருந்தாலும் தாமரை மலர் போல் உயர்ந்து தனித்திருப்பவன் தாள் போற்றி வேண்டுதல்வேண் டாமை இலானடி - விருப்பு வெறுப்பு அற்றவன் திருவடி போற்றி இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் மாட்டு (திருவடி) போற்றி - பிறப்பு இறப்பு நன்மை தீமை இல்லாதவன் திருவடி போற்றி ஐந்தவித்தான் தாள் போற்றி - நம் ஐம்புலன்களின் அர்ப்பணிப்பை ஏற்று மாயையில் இருந்து விடுவிப்பவன் தாள் போற்றி தனக்குவமை இல்லாதான் தாள் போற்றி - இறைவனுக்கு சமமான, ஒப்புமையாக, இணையாக இல்லாதவன் ...